ETV Bharat / city

அடுத்த 5 நாள்களுக்கு தமிழ்நாட்டில் மழை

author img

By

Published : Sep 13, 2021, 2:34 PM IST

தென்மேற்குப் பருவக்காற்று, வெப்ப சலனம் ஆகியவற்றின் காரணமாக தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை
மழை

சென்னை: தென்மேற்குப் பருவக்காற்று, வெப்ப சலனம் ஆகியவற்றின் காரணமாக தமிழ்நாட்டில் இன்று (செப்.12) நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய திருப்பூர், தென்காசி மாவட்டங்கள், அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, திருப்பத்தூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் மழை

14.09.2021: நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய திருப்பூர், தென்காசி மாவட்டங்கள், அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்கள், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

15.09.2021: கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி மாவட்டங்கள் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

16.09.2021, 17.09.2021: தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையின் வானிலை நிலவரம்

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு

சோலையாறு, சின்கோனா பகுதிகளில் தலா 10செ.மீ, சின்னக்கல்லார் 9செ.மீ, வால்பாறை 7செ.மீ, நடுவட்டம் 6செ.மீ, கூடலூர் பஜார், அவலாஞ்சி தலா 5செ.மீ, பந்தலூர் 4செ.மீ, ஏற்காடு, சிவலோகம் தலா 3செ.மீ, தேக்கடி, பெரியாறு, கொத்தவாச்சேரி, காரையூர் தலா 2செ.மீ, கன்னியாகுமரி, குமாரபாளையம், பேராவூரணி, ஓமலூர், தியாகதுர்கம் தலா 1செ.மீ.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

நேற்று (12.09.2021) மாலை நிலைகொண்டிருந்தகாற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (13.09.2021) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வடக்கு ஒடிசா கடலோரப் பகுதியில் நிலைகொண்டுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழக்கக்கூடும்.

வங்கக் கடல்

13.09.2021: மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மத்திய மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

அரபிக்கடல்

13.09.2021 முதல் 17.09.2021 வரை தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

ஆகையால் மேற்கூறிய பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென வானிலை ஆய்வு மையத்தால் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சென்னை: தென்மேற்குப் பருவக்காற்று, வெப்ப சலனம் ஆகியவற்றின் காரணமாக தமிழ்நாட்டில் இன்று (செப்.12) நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய திருப்பூர், தென்காசி மாவட்டங்கள், அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, திருப்பத்தூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் மழை

14.09.2021: நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய திருப்பூர், தென்காசி மாவட்டங்கள், அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்கள், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

15.09.2021: கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி மாவட்டங்கள் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

16.09.2021, 17.09.2021: தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையின் வானிலை நிலவரம்

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு

சோலையாறு, சின்கோனா பகுதிகளில் தலா 10செ.மீ, சின்னக்கல்லார் 9செ.மீ, வால்பாறை 7செ.மீ, நடுவட்டம் 6செ.மீ, கூடலூர் பஜார், அவலாஞ்சி தலா 5செ.மீ, பந்தலூர் 4செ.மீ, ஏற்காடு, சிவலோகம் தலா 3செ.மீ, தேக்கடி, பெரியாறு, கொத்தவாச்சேரி, காரையூர் தலா 2செ.மீ, கன்னியாகுமரி, குமாரபாளையம், பேராவூரணி, ஓமலூர், தியாகதுர்கம் தலா 1செ.மீ.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

நேற்று (12.09.2021) மாலை நிலைகொண்டிருந்தகாற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (13.09.2021) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வடக்கு ஒடிசா கடலோரப் பகுதியில் நிலைகொண்டுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழக்கக்கூடும்.

வங்கக் கடல்

13.09.2021: மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மத்திய மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

அரபிக்கடல்

13.09.2021 முதல் 17.09.2021 வரை தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

ஆகையால் மேற்கூறிய பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென வானிலை ஆய்வு மையத்தால் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.